Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி பந்தில் சிக்சரை மிஸ் செய்த தோனி.. சிஎஸ்கே போராடி தோல்வி..!

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2023 (08:00 IST)
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் 3 பந்துகளில் 7 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்க தவறியதால் சிஎஸ்கே அணி போராடி தோல்வி அடைந்தது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தானி 175 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 176 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கடைசி ஓவரில் 21 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் முதல் இரண்டு பந்துகள் வைடு மற்றும் அடுத்த இரண்டு பந்துகள் சிக்ஸர் என மூன்று பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில் மீதமுள்ள மூன்று பந்துகளில் ஏழு ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியிருந்தது

ஆனால் அடுத்த மூன்று பந்துகளில் ன்று ரன்கள் மட்டுமே கிடைத்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஜடேஜா மற்றும் தோனி களத்தில் இருந்தும் வெற்றியை மிஸ் செய்தது சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments