Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடுமையாகவே போராடினோம்… கேப்டன் பும்ரா வருத்தம்!

Advertiesment
கடுமையாகவே போராடினோம்… கேப்டன் பும்ரா வருத்தம்!

vinoth

, ஞாயிறு, 5 ஜனவரி 2025 (12:21 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட  பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணி 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.  இதனால் இந்திய அணிக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

கேப்டன் ரோஹித் ஷர்மா, பயிற்சியாளர் கம்பீர் மற்றும் மூத்த வீரர் கோலி ஆகியோர் கடுமையான கண்டனங்களை எதிர்கொள்கின்றனர். இந்த தொடரில் மிகச்சிறப்பாக செயல்பட்ட கேப்டன் பும்ராவின் உழைப்பெல்லாம் வீணாகப் போனது என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். சிட்னி டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் காயம் காரணமாக பந்துவீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தோல்விக்குப் பின்னர் பேசிய பும்ரா “இந்த தொடரில் நாங்கள் கடுமையாகவே போராடினோம். கடைசி போட்டியில் ஒரு பவுலர் குறைவாக இருந்தபோதும் எங்கள் வீரர்கள் சிறப்பாகவே விளையாடினார். தோல்வி வருத்தமாக உள்ளது. சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணிக்கு எனது வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூன்றாம் நாளில் இரு அணி வீரர்களும் பிங்க் நிற ஜெர்ஸியில் விளையாடக் காரணம் என்ன?