Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி நிமிட பரபரப்பு கோல்: பிரேசில் வெற்றி

Webdunia
சனி, 23 ஜூன் 2018 (08:25 IST)
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஒரு போட்டியில் 90 நிமிடங்கள் முடிந்த பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் போட்டு பிரேசில் அணி, கோஸ்டாரிகா அணியை வீழ்த்தியது. 
 
உலககோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றியும் ஒன்றில் டிராவும் செய்துள்ளது. இதனையடுத்து நேற்று பிரேசில அணி, கோஸ்டாரிகா அணியுடன் மோதியது.
 
பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் முதல் பாதி, இரண்டாம் பாதி ஆகிய இரண்டு நிலையிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. எனவே ஆட்ட நேர முடிவில் 0-0 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகித்தன
 
இந்த நிலையில் 90 நிமிடங்கள் முடிந்த பின்னர் காயம், ஆட்டம் நேரம் நிறுத்தம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு 7 நிமிடம் கூடுதலாக அளிக்கப்பட்டது. இதில் பிரேசில் அணி முதல் நிமிடத்திலேயே கோல் போட்டு அசத்தியது. பிரேசில் அணியின் ஃபிர்மினோ தலையால் முட்டிய பந்தை பிலிப்பே கவுட்டினோ வேகமாக ஓடிவந்து அடித்து கோலக்கினார். இதனையடுத்து 7வது நிமிடத்தில் நெய்மர் எளிதாக ஒரு கோல் அடித்தார். இதனால் பிரேசில் அணி, கோஸ்டாரிகாவை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments