Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் சாம்பியன் பட்டம் பெற்ற பெங்களூருக்கு எத்தனை கோடி? பஞ்சாபுக்கு எத்தனை கோடி?

Siva
புதன், 4 ஜூன் 2025 (07:09 IST)
2025 ஆம் ஆண்டு ஐபிஎல் சாம்பியன் பட்டம் பெற்ற பெங்களூர் அணிக்கு, ஒரு பக்கம் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், அந்த அணிக்கு கிடைத்த பரிசுகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற பெங்களூர் அணி, 18 ஆண்டுகால கனவு நனவானது. அதனால், அதன் வீரர்கள் உற்சாகமாக உள்ளனர்.

இந்த நிலையில், ஐபிஎல் சாம்பியன் பட்டம் பெற்ற பெங்களூரு அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. வெறும் ஆறு ரன்களில் வெற்றி வாய்ப்பை இழந்து இரண்டாம் இடத்தை பிடித்த பஞ்சாப் அணிக்கு, 13 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் இறுதிப்போட்டி வரை சென்று, இரண்டாவது முறையாக பஞ்சாப் அணி கோப்பையை நழுவ விட்டது என்பதும், பஞ்சாப் கடந்த 18 ஆண்டு கால கோப்பை கனவு மீண்டும் தகர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோப்பையை வென்றவுடன், "விராட் கோலி என் ஆன்மா, இதயம், எல்லாமே பெங்களூர் அணி தான். ஐபிஎல் இல் நான் விளையாட போகும் கடைசி நாள் வரை, பெங்களூர் அணிக்காக மட்டுமே விளையாடுவேன்," என்று உணர்ச்சிவசத்துடன் கூறினார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவரில் 3 விக்கெட்.. ஆர்சிபி கொடுத்த இலக்கை எட்டுமா பஞ்சாப்?

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments