Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்கு வீரர்களை புகழ்ந்து பிசிசிஐ தலைவர் கங்குலி டிவிட்!

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (18:00 IST)
இந்திய அணி சிட்னி டெஸ்ட் போட்டியை சிறப்பாக விளையாடி சமன் செய்த நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று நடந்து முடிந்த சிட்னி டெஸ்ட் போட்டியில் 403 ரன்களை துரத்திய இந்திய அணி 334 ரன்கள் சேர்த்து போட்டியை டிரா செய்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய பேட்ஸ்மேன்களான புஜாரா, பண்ட், விஹாரி மற்றும் அஸ்வின் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ட்ரா செய்தது. ரிஷப் பண்ட் மட்டும் அவுட் ஆகவில்லை என்றால் வெற்றி பெற்றிருக்கக் கூட வாய்ப்பு இருந்தது.

இந்நிலையில் இந்த போட்டி டிரா ஆக சிறப்பாக விளையாடிய புஜாரா, பண்ட், ஹனுமா விஹாரி மற்றும் அஸ்வின் ஆகியோரை பிசிசிஐ தலைவர் கங்குலி பாராட்டியுள்ளர். அதில் ‘இவர்கள் நான்கு பேரும் அணிக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை உணர்ந்திருப்பார்கள். இந்தியா சிறப்பாக செயல்பட்டது. தொடரை வெல்வதற்கான சிறப்பான நேரம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பி.சி.சி.ஐ-க்கு தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு.. புதிய மசோதாவால் பரபரப்பு..!

மீண்டும் டெஸ்ட் மற்றும் டி 20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்!.

பும்ரா இல்லாத போட்டிகளில் எல்லாம் இந்தியா வெற்றி பெறுகிறதா? சச்சின் சொல்வது என்ன?

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

அடுத்த கட்டுரையில்
Show comments