Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணிக்கு தலா ரூ.80 கோடி... ஜனவரியில் ஐபிஎல் ஏலம்!!

Webdunia
புதன், 20 டிசம்பர் 2017 (16:43 IST)
பிசிசிஐ நடத்தும் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் இந்த ஆண்டுடன் 10 ஆண்டுகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது. இந்நிலையில், இந்த சீசன் ஐபிஎல் போட்டி மீது அதிக எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் போட்டியில் இடம் பெறயுள்ளன. ஐபிஎல் போட்டிகளில் உரிமத்தை இந்த ஆண்டு அதிக விலை கொடுத்து ஸ்டார் ஸ்போட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
 
மேலும், போட்டி நேரங்களிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. போட்டி இரவு 7 மணிக்கு நடத்தலாம் என பிசிசிஐ ஆலோசனை வழங்கியுள்ளது. இது குறித்த உறுதியான முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை.
 
இந்நிலையில், ஐபிஎல் தொடரின் 11 வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் அடுத்த மாதம் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை பிசிசிஐ மூத்த அதிகாரி உறுதிப்படுத்தி உள்ளார். 
 
ஒவ்வொரு அணியும் வீரர்கள் ஏலத்துக்காக செலவிடும் ஒட்டுமொத்த தொகையை ரூ.66 கோடியில் இருந்து ரூ.80 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments