Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணிக்கு தலா ரூ.80 கோடி... ஜனவரியில் ஐபிஎல் ஏலம்!!

Webdunia
புதன், 20 டிசம்பர் 2017 (16:43 IST)
பிசிசிஐ நடத்தும் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் இந்த ஆண்டுடன் 10 ஆண்டுகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது. இந்நிலையில், இந்த சீசன் ஐபிஎல் போட்டி மீது அதிக எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் போட்டியில் இடம் பெறயுள்ளன. ஐபிஎல் போட்டிகளில் உரிமத்தை இந்த ஆண்டு அதிக விலை கொடுத்து ஸ்டார் ஸ்போட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
 
மேலும், போட்டி நேரங்களிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. போட்டி இரவு 7 மணிக்கு நடத்தலாம் என பிசிசிஐ ஆலோசனை வழங்கியுள்ளது. இது குறித்த உறுதியான முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை.
 
இந்நிலையில், ஐபிஎல் தொடரின் 11 வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் அடுத்த மாதம் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை பிசிசிஐ மூத்த அதிகாரி உறுதிப்படுத்தி உள்ளார். 
 
ஒவ்வொரு அணியும் வீரர்கள் ஏலத்துக்காக செலவிடும் ஒட்டுமொத்த தொகையை ரூ.66 கோடியில் இருந்து ரூ.80 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்சிபி வீரர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்.. பெண் கொடுத்த புகாரால் பரபரப்பு..!

ஸ்மிருதி மந்தனா அபார சதம்.. 97 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா..!

சச்சின், கோலிக்கு இணையான மரியாதையை பும்ராவுக்குக் கொடுக்கவேண்டும் –அஸ்வின் கருத்து!

பும்ரா இல்லாவிட்டால் இரண்டாவது டெஸ்ட்டிலும் தோல்விதான்… ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

அமெரிக்காவில் சி எஸ் கே நிர்வாகிகளோடு சஞ்சு சாம்சன் சந்திப்பு… அப்ப உண்மதான் போலயே!

அடுத்த கட்டுரையில்
Show comments