Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

Webdunia
சனி, 28 டிசம்பர் 2019 (08:55 IST)
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர விருது வழங்கும் விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்துக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கப்பட உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் தமிழகத்தை சேர்ந்தவர். ஸ்ரீகாந்த் 43 டெஸ்ட் போட்டிகளிலும், 146 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியவர். மொத்தமாக 6153ரன்கள் எடுத்த இவர் 6 சதங்களை வீழ்த்தியவர். 1983ம் ஆண்டு உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இருந்த ஸ்ரீகாந்த் இறுதி ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்தவர் ஆவார்.

2019ம் ஆண்டிற்கான கிரிக்கெட் துறை சார்ந்த சாதனையாளர்களுக்கான விருதை இந்திய கிரிக்கெட் வாரியம் ஜனவரி 12ம் தேதி வழங்க இருக்கிறது. அதில் ஸ்ரீகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. அதேபோல இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ராவுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments