Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ கடும் கண்டனம்: ஏன் தெரியுமா?

BCCI
, செவ்வாய், 28 ஜூன் 2022 (17:26 IST)
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இங்கிலாந்து நாட்டில் தற்போது அயர்லாந்து நாட்டு கிரிக்கெட் அணியுடன் டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகின்றது. மேலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது.
 
இந்த நிலையில் ஏற்கனவே இங்கிலாந்து சென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் 
 
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்து நாட்டில் உள்ள பொது இடங்களில் நடனம் ஆடியதாகவும் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டதாகவும் தெரிகிறது
 
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிசிசிஐஅத்தியாவசியமான தேவை இருந்தால் மட்டுமே வீரர்கள் வெளியே வரவேண்டும் என அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளன
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித்துக்கு பதில் புதிய வீரர் சேர்ப்பு!