Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தலைநிமிர்ந்து நாடு திரும்புங்கள்: வங்கதேச அணிக்கு சங்கரகரா ஆறுதல்

Advertiesment
, சனி, 17 ஜூன் 2017 (06:32 IST)
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக மோதிய வங்கதேசம், பேட்டிங், பெளலிங், பீல்டிங் என அனைத்து துறையிலும் தோற்கடிக்கப்பட்டது. குறிப்பாக வங்கதேச வீரர்களால் இந்தியாவின் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்த முடிந்தது.



 


இந்த நிலையில் வங்கதேச அணிக்கு ஆறுதல் கூறும் வகையில் இலங்கை கிரிக்கெட் வீரர் சங்கரகரா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தாலும் இந்த தொடரில் வங்கதேச அணி விளையாடியதை நினைத்து தலையை நிமிர்த்தி சொந்த நாட்டுக்குத் திரும்பலாம். ஷகிப் அல் ஹசன் போன்ற சீனியர் வீரர்களால் அந்த அணி சில ஆண்டுகளாக நல்ல முன்னேறம் அடைந்து வருகிறது. இந்த தொடர் முன்னேற்றங்கள் மூலம் அவர்கள் அடுத்த வரவுள்ள கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு ப்ளான் செய்து சாதிக்கலாம். அவர்களிடம் திறமை பொதிந்த அணி உள்ளது. ஆனால், சில நல்ல பௌலர்களை அணியில் இணைத்துவிட்டால், வெற்றிகள் பல அவர்கள் வசம் வர காத்திருக்கின்றன' என்று சங்கரகரா கூறினார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு ஆட்வைஸ் வழங்கிய டிராவிட்