Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு ஆட்வைஸ் வழங்கிய டிராவிட்

Advertiesment
இந்தியா
, வெள்ளி, 16 ஜூன் 2017 (20:54 IST)
ஐசிசி சாமியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட உள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் டிராவிட் ஆலோசனை கூறியுள்ளார்.


 

 
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதியுள்ளன. ஞாயிற்று கிழமை நடக்கவுள்ள இந்த போட்டி குறித்து இரு நாட்டு ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
 
ஏற்கனவே லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டியில் நிச்சயம் கவனமாக விளையாடும். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் இரு அணிகளும் அலோசனை கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-
 
இந்திய அணியின் பேட்டிங் அருமையாக உள்ளது. வங்கதேசத்துடன் நடந்த போட்டியின்போது மோதிய அதே அணியையே பாகிஸ்தான் போட்டிக்கும் பயன்படுத்துவதே நல்லது. அணியில் மாற்றம் தேவையில்லை.  
 
பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு நெருக்கடி தர வேண்டுமானால் அனுபவம் வாய்ந்த வீரர்களான சோயப் மாலிக், ஹபீஸ் ஆகியோர் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம், என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் - இங்கிலாந்து போட்டியில் சூதாட்டம்: முன்னாள் வீரர் பகீர் புகார்!