Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியை வென்றுவிட்டோம் என உச்சத்துக்கு செல்லவேண்டாம்… வீரர்களுக்கு பாபர் ஆசம் அறிவுரை!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (12:25 IST)
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கிரிக்கெட்டில் வெற்றியும் தோல்வியும் என்றைக்கும் நிலையானது அல்ல. அந்தந்த நாளில் சிறப்பாக விளையாடும் அணி வெற்றி பெறும். அதுதான் விளையாட்டின் நியதி. ஆனால் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோற்றதை ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் ஊதிப் பெருக்கி தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் அணி முதல் முதலாக இந்திய அணியை உலகக்கோப்பையில் வெற்றி பெற்றுள்ளது. அதன் பின்னர் வீரர்களிடம் பேசிய அணியின் கேப்டன் பாபர் ஆசம் ‘இந்தியாவை வென்றுவிட்டோம் என்று யாரும் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு செல்லவேண்டாம். இது அணியில் உள்ள எல்லோருக்கும் கிடைத்த வெற்றி. நமது நோக்கம் உலகக் கோப்பையை வெல்வதுதான். இந்தியாவை வென்றுள்ளதால் நம்பிக்கை பிறந்துள்ளது. இது நீண்ட நாட்களுக்கு தொடரவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் கிளம்பிய ருதுராஜ்.. கேப்டனான ‘தல’ தோனி! - இனிதான் CSK அதிரடி ஆரம்பமா?

முதல் மூன்று வருடங்கள் எனக்கு RCB ல் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை… கோலி ஓபன் டாக்!

அடக்கொடுமையே.. எப்டி இருந்த மனுஷன்!? ஸ்டேடியத்தில் சமோசா விற்கும் சாம் கரண்? - வைரலாகும் வீடியோ!

‘பிரித்வி ஷா மாதிரி அழப் போகிறாய்’… ஜெய்ஸ்வாலை எச்சரிக்கும் முன்னாள் பாக் வீரர்!

ஸ்டார்க் போட்டா ஆப்பு.. விராட் அடிச்சா டாப்பு? இன்று பலபரீட்சை செய்யும் RCB vs DC! முதலிடம் யாருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments