Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோல்விக்கு காரணம் விராத் கோஹ்லியின் ஆமைவேக ஆட்டம்: நெட்டிசன்கள் குற்றச்சாட்டு!

தோல்விக்கு காரணம் விராத் கோஹ்லியின் ஆமைவேக ஆட்டம்: நெட்டிசன்கள் குற்றச்சாட்டு!
, திங்கள், 25 அக்டோபர் 2021 (08:22 IST)
நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் விராத் கோலியின் ஆமை வேக ஆட்டம் ஒரு முக்கிய காரணம் என நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர் 
 
இந்திய அணி நேற்று 33 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்ததால் பதட்டமடைந்த விராத் கோலி விக்கெட்டுக்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆமை வேகத்தில் ஆடினார் என்பதும் அதுவே ஸ்கோர் உயராமல் இருப்பதற்கு காரணம் என்று நெட்டிசன்கள் கூறியுள்ளார்கள் 
 
அவர் நேற்றைய போட்டியில் 49 பந்துகளில் 57 ரன்கள் அடித்தது என்பது டி20 போட்டிக்கான ரன்ரேட் அல்ல என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்/ ஆனால் அதே நேரத்தில் ரிஷப் பண்ட் அடித்தது போல அதிரடியாக விராட் கோலியும் அடித்திருந்தால் நிச்சயம் ஸ்கோர் 170ஐ தாண்டி இருக்கும் என்றும் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். கடைசி நேரத்தில் அடித்து ஆட வேண்டும் என்ற நிலையில் விராட் கோலி விக்கெட்டை பறிகொடுத்ததும் நேற்றைய தோல்விக்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கே.எல்.ராகுல் அவுட்டே இல்லையா? அதிர்ச்சி தகவல்