Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோனி விக்கெட்டுக்காக மூன்று ஆண்டுகள் காத்திருந்தேன்… ஆவேஷ் கான் உற்சாகம்!

தோனி விக்கெட்டுக்காக மூன்று ஆண்டுகள் காத்திருந்தேன்… ஆவேஷ் கான் உற்சாகம்!
, செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (07:42 IST)
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பவுலர் ஆவேஷ் கான் தோனியை கிளீன் போல்டாக்கினார்.

சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட தோனி இப்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடிக் கொண்டிருக்கிறார். ஆனால் கடந்த இரண்டு சீசன்களாக அவர் மோசமான பார்மில் இருக்கிறார். இந்நிலையில் இந்த சீசனின் முதல் போட்டியிலேயே அவர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

டெல்லி அணிக்கெதிரான போட்டியில் அவரை பவுல்டாக்கிய ஆவேஷ் கான் ‘தோனியின் விக்கெட்டை எடுப்பது எனது கனவுகளில் ஒன்று. மூன்று வருடங்களுக்கு முன்பே தோனியின் கேட்ச் மிஸ் ஆனது. ஆனால் இப்போது கிடைத்துள்ளது. சமீபகாலமாக அவர் அதிகமான போட்டிகளில் விளையாடவில்லை. அதனால் அவரை ப்ரஷர் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு விக்கெட் எடுத்தோம்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் போட்டிகளுக்கு இடையே விளம்பரம்… 10 வினாடிக்கு 14 லட்ச ரூபாய்!