Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் நானே வருவேன்… செல்வராகவன் தனுஷ் படத்தில் ஏற்பட்ட குழப்பம்!

மீண்டும் நானே வருவேன்… செல்வராகவன் தனுஷ் படத்தில் ஏற்பட்ட குழப்பம்!
, வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (10:31 IST)
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள ராயன் படத்தில் விஷ்ணு விஷால் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.

இயக்குநர் செல்வராகவன்,தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் இணையும் புதிய படம் நானே வருவேன். சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு மூவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்ளனர், புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்துக்கான திரைக்கதை மற்றும் பாடல் மெட்டமைப்பது ஆகிய பணிகளில் செல்வராகவன் ஈடுபட்டு வந்தார். படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் படத்தின் பெயர் மற்றும் கதை ஆகியவை மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்துக்கு புதிதாக ராயன் என தலைப்பு வைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் கதைக்களத்தையும் கேங்ஸ்டர் களத்துக்கு மாற்றியுள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது அந்தப் படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு மீண்டும் நானே வருவேன் படத்தையே தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இதில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக மேயாத மான் புகழ் இந்துஜா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு வழியாக முடிந்த வலிமை படப்பிடிப்பு… கொண்டாடி மகிழ்ந்த ரசிகர்கள்!