Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய மகளிர் அணியை ஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலியா.. 3வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி..!

Advertiesment
இந்திய மகளிர் அணியை ஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலியா.. 3வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி..!
, புதன், 3 ஜனவரி 2024 (07:59 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கிடையே ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடந்த நிலையில் இந்த தொடரில் மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா மகளிர் அணி வெற்றி பெற்று இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது. 
 
நேற்று மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி 50 ஓவர் களில்  ஏழு விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்தது.  
 
இதனை அடுத்து 339 என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய மகளிர் அணி 32.4 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை அடுத்து ஆஸ்திரேலியா மகளிர் அணி 190 வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.  
 
ஏற்கனவே நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ள நிலையில்  அந்த அணி மூன்று போட்டிகளிலும் வென்று தொடரையும் வென்றுள்ளது.
 
 இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி வரும் ஐந்தாம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவரால பெரிய பயன் இல்லை… அதனால கோலியே கேப்டனாக இருக்கலாம்… சிஎஸ்கே வீரர் கருத்து!