Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்று நிதானமாக பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலியா!

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2020 (10:17 IST)
டாஸ் வென்று நிதானமாக பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலியா!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று சிட்னியில் சற்றுமுன்னர் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். இதனை அடுத்து டேவிட் வார்னர் மற்றும் ஃபின்ச் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கி நிதானமாக விளையாடி வருகின்றனர்.

சற்றுமுன் வரை ஆஸ்திரேலியா அணி 12 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்துள்ளனர் என்பதும், டேவிட் வார்னர் 29 பந்துகளில் 23 ரன்கள் ஃபின்ச் 42  பந்துகளில் 29 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்திய அணியில் இன்று நடராஜன் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் ஆடும் 11 அணியில் இல்லை என்பது தமிழக ரசிகர்களுக்கு அதிருப்தியாக உள்ளது. இந்திய அணிகள் இன்று விளையாடும் வீரர்களின் விவரம் பின்வருமாறு:
 
தவான், மயாங்க் அகர்வால், விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஷமி, சாஹல், சயினி, பும்ரா

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவரில் 3 விக்கெட்.. ஆர்சிபி கொடுத்த இலக்கை எட்டுமா பஞ்சாப்?

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments