Webdunia - Bharat's app for daily news and videos

Install App

51 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி: தொடரை வென்ற ஆஸ்திரேலியா!

Webdunia
ஞாயிறு, 29 நவம்பர் 2020 (17:59 IST)
51 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று சிட்னியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் வென்று உள்ளது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் எடுத்தது. வார்னர் 83 ரன்களும், பின்ச் 60 ரன்களும், ஸ்மித் 104 ரன்களும், லபிசாஞ்சே 70 ரன்களும், மாக்ஸ்வெல் 63 ரன்களும் எடுத்தனர்.
 
இந்த நிலையில் 390 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் மட்டுமே எடுத்தததால் 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. விராத் கோஹ்லி 89 ரன்களும், கே.எல்.ராகுல் 76 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 38 ரன்களும், தவான் 30 ரன்களும் எடுத்தனர். இன்றைய ஆட்டநாயகனாக ஸ்மித் தேர்வு செய்யப்பட்டார்.
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி மற்றும் 3ஆம் ஒருநாள் போட்டி டிசம்பர் 2ஆம் தேதி நடைபெறும்

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments