Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஸ்வினை விடாமல் துரத்தும் மன்கட் சர்ச்சைகள்!

அஸ்வினை விடாமல் துரத்தும் மன்கட் சர்ச்சைகள்!
, வெள்ளி, 16 ஜூலை 2021 (11:45 IST)
மன்கட் சர்ச்சைகள் அஸ்வினை இன்னும் விட்டபாடில்லாமல் துரத்தி வருகின்றன.

கடந்த ஆண்டு நடந்த 12 ஆவது ஐபிஎல் போட்டிகளின் பஞ்சாப் அணி வீரர் அஸ்வின் எதிரணி வீரர் ஜோஸ் பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் அவுட் ஆக்கியது கூறப்படுகிறது. மன்கட் முறையில் பேட்ஸ்மேனை எச்சரிக்காமல் முதல் முறையே அவுட் ஆக்கியது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.

இதையடுத்து அஸ்வின் இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக அஸ்வின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தான் செய்தது நியாயமே எனப் பதிலளித்து வருகிறார். இந்நிலையில் இரண்டாண்டுகளுக்குப் பிறகு இப்போது ஒரு ரசிகர் இதுபற்றிஅஸ்வினிடம் கேள்வி எழுப்ப ‘பேட்ஸ்மேன் க்ரீஸை விட்டு வெளியேறினால் இதை நான் மீண்டும் செய்வேன். நான் வேண்டுமானால் உங்களிடம் அனுமதிக் கோரிக் கொள்கிறேன். நீங்கள் இதுகுறித்து என் பெற்றோரிடம் சொல்லாமல் எனக்கு ஆதரவு அளிப்பீர்கள் என நம்புகிறேன்’ எனக் கூறி கேலி செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒலிம்பிக் தடகள வீரர்கள் 6 பேருக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்!