Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான்… கிரிக்கெட்டர் அஸ்வின் பதிவு!

Webdunia
திங்கள், 10 மே 2021 (08:56 IST)
இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் தனது குடும்பத்தினர் கொரோனாவில் மீண்டது குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் கொரொனா இரண்டாவது அலையில் தொற்றுக்குச் சாதாரண மக்கள் முதல் அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்,தனது குடும்பத்துடன் இருக்க வேண்டுமென்க் கூறி இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்.

இந்நிலையில், அஸ்வின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மேற்பட்டோருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இப்போது தனது குடும்பத்தினர் கொரோனாவால் பட்ட இன்னல்கள் பற்றி அவர் பேசியுள்ளார். அதில் ‘முதலில் என் குடும்பத்தினர் சிலருக்கு பிரச்சனை இருந்ததால் என் மனைவி என்னிடம் எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் குழந்தைகளுக்கு 4 நாட்களுக்கு மேலாக வாந்தியும், வயிற்றுப்போக்கும் இருந்ததால் என்னிடம் கூறினார். முதலில் ஆரோக்யமாக இருந்த என் தந்தை சில நாட்களில் மூச்சுத்திணறலுக்கு ஆளானார். அவருக்கு இணை நோய்களும் இருந்தன. ஆனால் இரண்டு கட்டமாக கொரோனா வேக்ஸினை அவர் போட்டுக்கொண்டதால் மட்டுமே அவர் காப்பாற்றப்பட்டார். என் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான். கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே வழி.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோப்பையை வென்றால் கோலி ஓய்வை அறிவிக்கக் கூடாது… ஐபிஎல் தலைவர் வேண்டுகோள்!

சஹாலைத் துரத்தும் இறுதிப் போட்டி துரதிர்ஷ்டம்… இந்த முறை வரலாற்றை மாற்றுவாரா?

இன்று ஐபிஎல் இறுதிபோட்டி.. 62% மழைக்கு வாய்ப்பு.. போட்டி ரத்தானால் சாம்பியன் யார்?

சல்மான்கான் போட்ட 11 வருடத்திற்கு முந்தைய ட்வீட்.. பஞ்சாப் ஜெயிக்கும் போதெல்லாம் வைரலாகுதே..

போட்டி முடிந்ததும் ஷஷாங்க் சிங்கிடம் கோபத்தைக் காட்டிய ஸ்ரேயாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments