Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோனியும் கோலியும் கிடைத்தது இந்தியாவின் அதிர்ஷ்டம்; நெஹ்ரா புகழாரம்

தோனியும் கோலியும் கிடைத்தது இந்தியாவின் அதிர்ஷ்டம்; நெஹ்ரா புகழாரம்
, திங்கள், 30 அக்டோபர் 2017 (11:56 IST)
தோனியும், கோலியும் இருப்பது இந்திய அணியின் அதிர்ஷ்டம் என வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார்.


 

 
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்றுடன் ஒருநாள் போட்டி முடிவடைந்தது. இதில் இந்தியா அணி 2-1 என்ற புள்ளி கணக்கில் தொடரை வென்றது.
 
ரோகித சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சதம் அடித்து அணிக்கு ரன் குவித்தனர். புவனேஸ்வர் மற்றும் பும்ரா கடைசி நேரத்தில் சிறப்பான பந்து வீசி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இதன் மூலம் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியது.
 
இந்த தொடரை வென்றது மூலம் இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. தொடர்ச்சியாக 7 ஒருநாள் போட்டி தொடரை வென்று இந்திய அணி புது சாதனை படைத்துள்ளது. விராட் கோலி சதம் அடித்ததை பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பாரட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா, முன்னாள் கேப்டன் தோனி மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் அணியில் இருப்பது இந்திய அணியின் அதிர்ஷ்டம் என கூறியுள்ளார். அடுத்து நடைபெற உள்ள டி20 போட்டியில் நெஹ்ரா தேர்வாகியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு நடைபெறும் டி20 போட்டியுடன் அவர் ஓய்வு பெறுகிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலி ரத்தத்தில் செஞ்சுரி வெறி: சேவக் நக்கல் டிவிட்!!