Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரோஹித் சர்மா சதம்: தொடரை வெல்லுமா இந்தியா

Advertiesment
rohit sharma
, ஞாயிறு, 29 அக்டோபர் 2017 (15:51 IST)
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்திய சுற்றுப்பயணம் செய்து ஏற்கனவே இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதால் இன்று நடைபெற்று வரும் 3வது ஒருநாள் போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும் அணியாக கருதப்படும்



 
 
இந்த நிலையில் கான்பூரில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. சற்றுமுன் வரை இந்திய அணி 34 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா மிக அபாரமாக சதம் அடித்து தொடர்ந்து விளையாடி வருகிறார். கேப்டன் விராத்கோஹ்லி 67 ரன்கள் அடித்துள்ளார்.
 
இன்னும் 16 ஓவர்கள் மீதமிருக்கையில் இந்தியா 300 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறவும், தொடரை வெல்லவும் அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புரோ கபடி: 3வது முறையாக சாம்பியன் ஆனது பாட்னா அணி