Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போராடி டிரா செய்தது இங்கிலாந்து: தொடரை வென்ற ஆஸ்திரேலியா!

போராடி டிரா செய்தது இங்கிலாந்து: தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
, ஞாயிறு, 9 ஜனவரி 2022 (16:59 IST)
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது ஆஷஸ் தொடர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்தது. 
 
கடந்த சில வாரங்களாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆஷஸ் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறும் நிலையில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் 388 என்ற இலக்கை நோக்கி விளையாடிக்கொண்டிருந்த இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் முடிவுக்கு வந்தது. இன்னும் ஒரே ஒரு விக்கெட்டை இங்கிலாந்து அணி இழந்திருந்தால் தோல்வி அடைந்திருக்கும் என்ற நிலையில் போராடி போட்டியை டிரா செய்தது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து இந்த தொடரில் 4 போட்டிகள் இதுவரை முடிவடைந்திருக்கும் நிலையில் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இரு அணிகளுக்கும் இடையிலான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜனவரி 14ம் தேதி தொடங்க உள்ளது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிட்னி டெஸ்ட்: இன்றைய கடைசி நாளில் இங்கிலாந்து வெல்லுமா?