Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகக்கோப்பை கால்பந்து: குரோஷியா அணியின் கனவு தகர்ந்தது!

Argentina
, புதன், 14 டிசம்பர் 2022 (07:53 IST)
உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று அதிகாலை நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையிலான போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிக்கு தகுதி பெற்றது. 
 
இதனை அடுத்து 7வது முறையாக அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக அரையிறுதிப் போட்டியில் தகுதி பெற்ற குரோஷியா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அணியின் கனவு தகர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று மதியம் பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையிலான அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது என்பதும் டிசம்பர் 18ஆம் தேதி இறுதி போட்டி நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் தொடர் தொடக்கம்.. வெற்றி யாருக்கு?