உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் வீராங்கனைக்கு ரூ.2.5 கோடி.. அரசு வேலையும் உண்டு..!

Mahendran
வெள்ளி, 7 நவம்பர் 2025 (16:51 IST)
ஐசிசி மகளிர் உலக கோப்பையை முதன்முறையாக வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஸ்ரீ சரணிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார்.
 
ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீ சரணி, முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜ் ஆகியோருடன் இன்று முதல்வர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, உலக கோப்பை வெற்றியில் முக்கியப் பங்காற்றிய 21 வயதான ஸ்ரீ சரணிக்கு பின்வரும் சலுகைகளை முதல்வர் அறிவித்தார்:
 
ரூ. 2.5 கோடி ரொக்கப் பரிசு.
 
குரூப் 1 நிலையிலான மாநில அரசுப் பணி.
 
கடப்பா மாவட்டத்தில் 1,000 சதுர அடி வீட்டு மனை.
 
இந்த அறிவிப்புகள், விளையாட்டில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னுடைய மாதவிடாய் தேதியை தேர்வாளர் கேட்டார்.. கிரிக்கெட் வீராங்கனை பகீர் புகார்..

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் வீராங்கனைக்கு ரூ.2.5 கோடி.. அரசு வேலையும் உண்டு..!

4வது டி20 போட்டி.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.. 2-1 என முன்னிலை..!

உலகக்கோப்பையை வென்ற வீராங்கனைகள் அனைவருக்கும் அசத்தல் பரிசு.. டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு..!

இந்த வருஷமும் definitely not தான்… தோனி குறித்து அப்டேட் கொடுத்த காசி விஸ்வநாதன்!

அடுத்த கட்டுரையில்
Show comments