Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு முடிவைத் திரும்பப்பெற்ற ராயுடு – இந்திய அணியில் இடம் கிடைக்குமா ?

Webdunia
சனி, 24 ஆகஸ்ட் 2019 (15:52 IST)
சமீபத்தில் அனைத்துவிதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த இந்திய வீரர் அம்பாத்தி ராயுடு ஓய்வு முடிவைத் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவரான அம்பத்தி ராயுடுவுக்கு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் அம்பத்தி ராயுடு அதிருப்தியில் இருந்தாலும், அவரது பெயர் காத்திருப்போர் பட்டியலில் இருந்ததால் வீரர்கள் யாராவது காயம் அடையும் பட்சத்தில் அவர் அணியில் சேர்த்து கொள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தவான், விஜய் ஷங்கர் காயத்தினால் விலகியபோதும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படாததால் விரக்தியடைந்த அவர் அனைத்துவிதமானக் கிரிக்கெட்டுக்கும் முழுக்குப் போடுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் சென்னை வந்த அவரிடம் ஓய்வு முடிவு பற்றிக் கேள்வி எழுப்பியபோது ‘ உலகக்கோப்பையில் இடம் கிடைக்காததால் விரக்தியில் நான் அந்த முடிவை எடுத்தேன். ஆனால் இப்போது அதைக் கடந்து சென்றிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. அதனால் ஓய்வு முடிவைத் திரும்பப்பெறுவது தொடர்பாக கிரிக்கெட் வாரியத்திடம் பேசி வருகிறேன். இந்திய அணிக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments