Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விராட் கோலியைக் காட்டிலும் ஜோ ரூட் அதிகமாக சம்பாதிக்கிறார்… ஆகாஷ் சோப்ரா கருத்து!

விராட் கோலியைக் காட்டிலும் ஜோ ரூட் அதிகமாக சம்பாதிக்கிறார்… ஆகாஷ் சோப்ரா கருத்து!
, வியாழன், 10 ஜூன் 2021 (08:16 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியைக் காட்டிலும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அதிகமாக சம்பாதிக்கிறார் என வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்த சம்பளம் கம்மியாக இருப்பதாகக் கூறி இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தனர். இது சம்மந்தமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் அதிகமாக சம்பாதிப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. அதற்கு பதிலளிக்கும் விதமாக வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா வெளியிட்ட வீடியோ ‘கோலியை விட ஜோ ரூட் அதிகமாக சம்பாதிக்கிறார். அதுவும் தனது தேசிய அணிக்காக மட்டுமே அவர் விளையாடுகிறார்.’ எனக் கூறியுள்ளார்.

கோலி ஆண்டு வருமானமாக 7 கோடி ரூபாயும், ஜோ ரூட் 9.8 கோடி ரூபாயும் வருவாய் ஈட்டுகிறார். ஆனால் விளம்பரங்கள் மற்றும் ஐபிஎல் தொடர் ஆகியவற்றைக் கணக்கில் வைத்துப் பார்த்தால் கோலியின் சம்பளமே அதிகமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சச்சின் விளையாடுவதை டிவியில் பார்த்து ஷாட்களைக் கற்றுக்கொண்டேன்… சேவாக் சொன்ன ரகசியம்!