Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோலி இருக்கும்போது எப்படி மேட்ச் அவங்க கைக்கு போகும்! ஜடேஜா ஆவேசம்!

கோலி இருக்கும்போது எப்படி மேட்ச் அவங்க கைக்கு போகும்! ஜடேஜா ஆவேசம்!
, வியாழன், 28 அக்டோபர் 2021 (15:24 IST)
பாகிஸ்தான் அணிக்கு எதிரான தோல்விக்குப் பின்னர் பேசிய கேப்டன் கோலி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை இழந்தது நமக்கு பின்னடைவாக ஆனது எனப் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரர்கள் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாத சூழலை உருவாக்கியது. இதுவே பாகிஸ்தான் அணிக்கு பலமாக அமைந்தது என கேப்டன் கோலி கூறியிருந்தார்.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா ‘கோலியின் அந்த கருத்தை நான் ஏற்கவில்லை. ஏனென்றால் கோலி போன்ற ஒருவர் இருக்கும்போது எப்படி மேட்ச் பாகிஸ்தான் கைக்கு செல்லும். அதுவும் கோலியே அப்படி பேசலாமா?. இத்தனைக்கும் கோலி அப்போது இரண்டு பந்துகள் கூட பேட் செய்யவில்லை. இந்த மனநிலைதான் அன்றைக்கு அணிக்கு தோல்வியை கொடுத்திருக்கும்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக கிறிஸ்டனுக்கு அதிக வாய்ப்பு!