Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இணைப்பு.. 128 ஆண்டுகளுக்கு பின் இணைப்பதாக தகவல்..!

ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இணைப்பு.. 128 ஆண்டுகளுக்கு பின் இணைப்பதாக தகவல்..!
, செவ்வாய், 10 அக்டோபர் 2023 (06:54 IST)
வரும் 2028 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த 1900 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாடப்பட்ட பின்னர் 128 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட பட உள்ளதாக கூறப்படுகிறது. 
 
கிரிக்கெட் மட்டுமின்றி மேலும் 4 விளையாட்டுக்கள் 2028 ஒலிம்பிக் போட்டியில் இணைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவை பேஸ்பால், சாஃப்ட்பால், லாக்ரோஸ், ஸ்குவாஷ் ஆகும்.
 
லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு, கிரிக்கெட் உள்பட 5 விளையாட்டு பட்டியலை ஒலிம்பிக் போட்டியில் இணைப்பதை உறுதி செய்துள்ளதாகவும். இது தொடர்பாக ஒலிம்பிக் திட்டக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், மும்பையில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அமர்வுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல்க்கு தூக்கினு வாங்கடா அந்த செல்லத்தை..! – ரச்சின் ரவீந்திராவுக்கு குவியும் ரசிகர்கள்!