Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய வீரர்களை தாக்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள்! – ஆசிய கோப்பை கால்பந்தில் அதிர்ச்சி!

Advertiesment
football
, திங்கள், 13 ஜூன் 2022 (17:15 IST)
ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில் ஆப்கானிஸ்தான் வீரர்களுடன் மைதானத்தில் சண்டை ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியின் மூன்றாவது ஆட்டம் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. போட்டியில் முதலில் இந்திய அணி வீரர் சுனில் சேத்ரி முதல் கோலை அடித்தார். அதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் வீரர் ஜுபைர் அமிரி ஒரு கோல் அடித்தார்.

இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்த நிலையில் கடைசி நிமிடத்தில் இந்திய வீரர் சாஹல் அப்துல் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

வெற்றி பெற்றதை அடுத்து இந்திய வீரர்களை மைதானத்தில் உற்சாகமாக அதை கொண்டாடினர். அப்போது ஆப்கானிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களை தள்ளிவிட்டனர். பதிலுக்கு இந்திய வீரர்களும் தள்ளிவிட இரு அணிகளுக்கும் இடையே மோதல் எழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு எழுந்த நிலையில் நடுவர்கள் இரு அணிகளையும் சமாதானம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம்; ஏலத்தில் உலக சாதனை! – எவ்வளவு கோடி தெரியுமா?