Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

7 இந்திய வீரர்களுக்கு கொரோனா: தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு!

7 இந்திய வீரர்களுக்கு கொரோனா: தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு!
, வியாழன், 13 ஜனவரி 2022 (10:26 IST)
7 இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து முக்கிய பேட்மிண்டன் தொடரில் இருந்து அவர்கள் விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்த தொடரில் கலந்து கொள்வதற்காக இந்திய வீரர்கள் தயாராகினர். இந்த நிலையில் இதில் கலந்துகொள்ள இருக்கும் ஏழு இந்திய வீரர்கள் இந்திய பேட்மிட்டன் வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த ஏழு வீரர்களும் போட்டி தொடரில் இருந்து விலகி விட்டதாகவும் பாதிக்கப்பட்ட வீரர்களுடன் போதும் எதிர் வீரர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 இந்திய பேட்மிட்டன் வீரர்கள் யார் யார் என்பதை உலக பேட்மிண்டன் சம்மேளனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கிலாந்து பேட்மிட்டன் அணியின் பயிற்சியாளர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியும் இந்த தொடரில் கலந்து கொள்ளவில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவால் விலகிய வாஷிங்டன் சுந்தர்… புதிய வீரர் சேர்ப்பு!