Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

329 ரன்களில் ஆல்-அவுட் ஆன இந்தியா; தொடரை வெல்லுமா?

329 ரன்களில் ஆல்-அவுட் ஆன இந்தியா; தொடரை வெல்லுமா?
, ஞாயிறு, 28 மார்ச் 2021 (17:37 IST)
329 ரன்களில் ஆல்-அவுட் ஆன இந்தியா; தொடரை வெல்லுமா?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் எடுத்தது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாகிய ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் தலா 37 மற்றும் 67 ரன்களை எடுத்து நல்ல தொடக்கத்தை தண்டனை
 
இருப்பினும் கேப்டன் விராட் கோலி 7 ரன்களில் அவுட் ஆனார் என்பதும் கேஎல் ராகுலும் 7 ரன்களில் அவுட் ஆனார்கள். இந்த நிலையில் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 78 ரன்களும், ஹர்திக் பாண்டியா அதிரடியாக 64 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினர்.
 
இதனை அடுத்து க்ருணால் பாண்டியா மற்றும் ஹர்திக் பாண்டியா ஓரளவுக்கு அடித்து விளையாடினர். இந்த நிலையில் 48.2 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்னும் சற்று நேரத்தில் 330 என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும் அணியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூன்றாவது ஒருநாள் போட்டி; டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு!