Webdunia - Bharat's app for daily news and videos

Install App

190 இலக்கை நோக்கி விளையாடி வரும் ஐதராபாத்: 3 விக்கெட்டுக்களை இழந்ததால் சிக்கல்

Webdunia
ஞாயிறு, 8 நவம்பர் 2020 (22:02 IST)
190 இலக்கை நோக்கி விளையாடி வரும் ஐதராபாத்:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய முக்கிய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது அந்த அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்து உள்ளது
 
அனைத்துப் போட்டிகளிலும் மிக அபாரமாக விளையாடி வரும் தவான் இன்றைய போட்டியில் 50 பந்துகளில் 78 ரன்கள் அடித்தார். ஹெட்மையர் கடைசி நேரத்தில் இறங்கி 22 பந்துகளில் 42 ரன்கள் அடித்தார். தொடக்க ஆட்டக்காரர் ஸ்டோனிஸ் மிக அபாரமாக விளையாடி 38 ரன்களும் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 21 ரன்கள் எடுத்தார்
 
பந்துவீச்சை பொறுத்தவரை சந்தீப் சர்மா, ஹோல்டர் மற்றும் ரஷித் கான் ஆகிய மூவரும் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 190 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் ஹைதராபாத் அணி சற்று முன் வரை 5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்து உள்ளனர். கேப்டன் வார்னர் 2 ரன்களில் ரபடா பந்தில் போல்ட் ஆனதால் அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அதேபோல் மணிஷ்பாண்டேவும் 21 ரன்களிலும், கார்க் 17 ர்ன்களிலும் அவுட் ஆனார்கள். இதனால் ஐதராபாத் அணி தத்தளித்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் 18 ஆண்டுகள் காத்திருந்தேன்… அனுஷ்கா சர்மா 11 ஆண்டுகள் காத்திருந்தார் –கோலி உருக்கம்!

எனது கனவை நனவாக்கிய அனைவருக்கும் நன்றி… RCB அணி குறித்து விஜய் மல்லையா நெகிழ்ச்சி!

கண்ணீரில் மிதக்கிறேன்… அண்ணனைப் பற்றி ட்வீட் செய்த ஹர்திக் பாண்ட்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments