Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீட்டில் காமதேனு வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள்...!!

வீட்டில் காமதேனு வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள்...!!
பலருக்கும் பணக்கஷ்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். கடன் வாங்காமல் காலத்தை ஓட்ட முடியாது. என்ன செய்தாலும், முன்னேற்றம் இருக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு முக்கியமான வழிபாட்டு முறையும் மந்திரமும் பற்றி பார்ப்போம்.
நமது பூஜை அறையில் ஒரு சில பொருட்களை வைத்து வழிபாடு செய்யும்போது வீடு சுபிட்சமாக இருக்கும். நல்லது நடக்கும். நினைத்தது நிறைவேறும். கேட்டது எல்லாம் கிடைக்கும். காமதேனு பசு கன்றுடன் கூடிய சிலையை உங்கள் வீட்டில் வாங்கி வைக்கலாம், சிலை வைக்க  முடியாதவர்கள் காமதேனு படத்தை வாங்கியும் வைக்கலாம்.
 
இந்த பசுவுடன் கூடிய கன்றை பூஜையறயில் வைத்து தினமும் பாலபிஷேகம் செய்யவேண்டும். இந்த பசுமாட்டின் கொம்பு, நெற்றி, கால்கள்,  கன்று, பசுமாட்டின் கொம்பு, நெற்றி, கால்கள், கன்று, பசுமாட்டின் மடி இவற்றிற்கு சந்தன குங்குமம் வைத்து மல்லிகை பூவை காமதேனுவிற்கு  சமர்பிக்கவேண்டும். அதன் பிறகு இந்த காமதேனுவை தொட்டு வணங்கி உங்களுடைய கோரிக்கையை வைக்கவேண்டும். நியாயமான நீங்கள்  கேட்கக்கூடிய கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நடக்கும்.
 
இந்த காமதேனுவை வீட்டில் வைத்து வழிபாடு செய்வதால் உங்களுடைய செல்வ நிலை உயரும். பணவரவு அதிகமாகும்.
 
மந்திரம்:
 
ஓம் சுபகாயை வித்மஹே
காமதாத்திரியை
சதீமஹி தந்னோ தேனு
ப்ரசோதயத்
 
இந்த மந்திரத்தை தினமும் 54 முறை காமதேனு சிலை மீது உங்கள் கைகளை வைத்து சொல்லிவர வேண்டும். இதனால் எல்லா  நன்மைகளும் செல்வங்களும் கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (05-12-2019)!