Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மிகுந்த பலன்களை பெற்றுத்தரும் அம்பிகை வழிபாடு !!

மிகுந்த பலன்களை பெற்றுத்தரும் அம்பிகை வழிபாடு !!
, வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (10:40 IST)
செவ்வாயும், வெள்ளியும் அம்பிகைக்கு உகந்த அற்புதமான நாட்கள். செவ்வாய்க் கிழமையில், ராகுகால வேளையான மாலை 3 முதல் 4.30 மணிக்குள், துர்க்கைக்கு தீபமேற்றி வழிபடலாம்.


வெள்ளிக்கிழமை ராகுகால வேளையான காலை 10.30 முதல் 12 மணிக்குள், துர்க்கையை வணங்கி எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவதும் நவகிரக சன்னிதிக்கு சென்று, ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்வதும் மிகுந்த பலனைத் தந்தருளும் என்பார்கள்.

மங்கள மாதமான மாசி மாதத்தில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்பாளுக்கு உரிய நாள்தான். அப்போது, அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசிப்பதும், தீபமேற்றி வழிபடுவதும் மங்காத செல்வத்தைத் தந்தருளும் என்கின்றனர் பக்தர்கள்.

இந்த மாசி வெள்ளியில், மாரியம்மன் முதலான தேவியரைத் தரிசனம் செய்யுங்கள். மகத்தான வாழ்க்கை நிச்சயம் அமையும். தடைபட்ட சுபகாரியங்கள் நடக்கும்.

மாசிமக புனித நீராடல் செய்ய இயலாதோர் மாசி மக புராணம் படிக்கலாம். அல்லது கேட்கலாம் அதுவும் புண்ணியமே. மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்தபின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்.

மாசிமக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு விரதம் இருந்து வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் !!