Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகாளயபட்ச நாட்களில் முன்னோர்களை நினைத்து வழிபாடு !!

மகாளயபட்ச நாட்களில் முன்னோர்களை நினைத்து வழிபாடு !!
மகாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசிவழங்குவதற்காகவே பிதுர் லோகத்தில் இருந்து, பிதுர்தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க  பூலோகத்திற்கு வருகின்றனர். 

இந்நாட்களில் நம் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. வீணான பொழுதுபோக்கு அம்சங்களை அறவே தவிர்த்து, உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
 
இந்த பதினான்கு நாட்களும் முன்னோர் வழிபாட்டினைச் செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத்தலங்களுக்கு  ஒருநாளாவது செல்ல வேண்டும். முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவுக்கு புல், பழம் கொடுக்கலாம்.
 
ஸ்ரீமந்நாராயணனே ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எதுவும்  செய்ய இயலாதவர்கள் முன்னோரின் பெயர்களை உச்சரித்து, "காசி காசி" என்று சொன்னபடியே, இந்த பட்ச நாட்களில் தினமும் காலை 06.30 மணிக்கு மேல் மாலை  05.00 மணிக்குள் ஒரு வாழைப்பழத்தை ஒரு பசுவிற்க்கு கொடுக்கவும். 
 
கடைசி நாளான அமாவாசையன்று 21 கைபிடி அகத்தீக்கீரை பசுவுக்கு கொடுக்க, உங்கள் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைந்து உங்கள் வாழ்க்கை சிறக்கும் இதை திதி கொடுக்கும் ஆண்கள் மட்டுமே செய்ய வேண்டும். பின்னர், பூஜையறையில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓம் என்பதை பிரணவ மந்திரம் என கூறப்படுவது ஏன்...?