Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகாளய பட்சத்தின்போது தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் !!

மகாளய பட்சத்தின்போது தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் !!
மகாளய பட்சத்தின் போது ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் கிடைக்கும் பலன்கள் என்னவென்று பார்ப்போம். தர்ப்பணம் ஆரம்ப நாள் 02/09/2020  புதன்கிழமை.

1. முதலாம் நாள்: பிரதமை - பணம் சேரும்.
 
2. இரண்டாம் நாள்: துவிதியை - மகப்பேறு.
 
3. மூன்றாம் நாள்: திரிதியை - நினைத்தது நிறைவேறுதல்.
 
4. நான்காம் நாள்: சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்.
 
5. ஐந்தாம் நாள்: பஞ்சமி - செல்வம் சேரும் நியாயமான சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்.
 
6. ஆறாம் நாள்: சஷ்டி - புகழ் கிடைத்தல்.
 
7. ஏழாம் நாள்: சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல் உத்தியோகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும், தடை பட்ட பதவி உயர்வு கிடைக்கும்.
 
8. எட்டாம் நாள்: அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்.
 
9. ஒன்பதாம் நாள்: நவமி - திருமண தடை நீங்கும். சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள்  பிறத்தல். குடும்ப ஒற்றுமை சிறப்படையும்.
 
10. பத்தாம் நாள்: தசமி - நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல், எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.
 
11. பதினொன்றாம் நாள்: ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி.
 
12. பன்னிரெண்டாம் நாள்: துவாதசி - தங்கநகை சேர்தல், விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.
 
13. பதின்மூன்றாம் நாள்: திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்.
 
14. பதினான்காம் நாள்: சதுர்த்தசி - ஆயுள் விருத்தியாகும், பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
 
15. பதினைந்தாம் நாள்: மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகாளய பட்சம் ஆரம்பமாகும் காலம் எப்போது தெரியுமா....?