Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வளர்பிறை, தேய்பிறை காலங்களில் நல்ல காரியத்தை தொடங்குவது சரியா?

வளர்பிறை, தேய்பிறை காலங்களில் நல்ல காரியத்தை தொடங்குவது சரியா?
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். 
தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி திதிகள்.

 
ஒரு கண்ணுள்ள திதிகள்: வளர்பிறை, தேய்பிறை காலங்களில் சில திதிகளுக்கு ஒரு கண்மட்டுமே உண்டு. அதாவது இந்த சமயத்தில் செய்யப்படும்  செயல்கள் பூரண பலன் தராது. எனவே இத்திதிகளில் சுபகாரியங்களைத் தவிர்ப்பது நல்லது. அந்தத் திதி காலங்களைத் தெரிந்து  கொள்ளுங்கள்.
 
சுபகாரியங்களைத் தவிர்க்கும் காலங்கள்: 
 
வளர்பிறை தேய்பிறை, பஞ்சமி பிரதமை, சஷ்டி அஷ்டமி, சப்தமி நவமி, சதுர்த்தசி தசமி, பவுர்ணமி.
 
பொதுவாக பலரும் தவிர்க்கும் திதிகள்: 
 
வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலுமே அஷ்டமி, நவமி திதிகளையுமே தவிர்ப்பர். அமாவாசை, பவுர்ணமிக்கு முந்தைய நாளாக வரும் சதுர்த்தசியும், அடுத்த நாளாக வரும் பிரதமையும் ஆகாத திதிகளாகும். இவ்விரண்டு திதிகள் வரும்  நாட்களில் எந்த ஒரு நல்ல காரியத்தைத் துவங்கினாலும் பொருள் நஷ்டம், எதிர்ப்பு, விரோதம், நோய் போன்ற பாதிப்புகள்  வரக்கூடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீடுகளில் வாஸ்து தொடர்பான பொருட்களை வைக்க வேண்டுமா?