Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாஸ்துப்படி இதை செய்யாவிட்டால் அவை வீட்டை பாதிக்குமா...?

வாஸ்துப்படி இதை செய்யாவிட்டால் அவை வீட்டை பாதிக்குமா...?
வீட்டில் எந்த திசையிலாவது வெட்டு அல்லது வளைவுகள் இருந்தால்; அது வீட்டை பாதிக்கும். முக்கியமாக தென் மேற்கு, வடக்கு, வடகிழக்கு, தென் கிழக்கு திசைகளில் இருந்தால், பெரிய பிரச்சனைகள் ஏற்படும். இதன் பின்னணியில் பல ரகசியங்கள் அடங்கியிருக்கிறது.
மிகவும் அடர்த்தியான வண்ணங்களை கொண்டு சுவற்றில் வர்ணங்களை பூசக்கூடாது. முக்கியமாக சிவப்பு மற்றும் செந்நீலம் நிறங்கள். இது நோயை உண்டாகும் சக்தியை தூண்டும்.
 
தண்ணீர் அல்லது நீரூற்றின் படங்களை படுக்கையறையில் மாட்டக்கூடாது. இது உங்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கும்.
 
பூஜைப் பொருட்களை அல்லது கடவுள் படங்களை ஏதாவது உத்திரம் அல்லது நிலை அடுக்கின் கீழ் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால்; அது  மன அழுத்தத்தைத் தரும்.
 
வடகிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் கனமான பொருட்களான பீரோவை வைக்கக்கூடாது. அது நம் பண விரயத்துக்கு தடை போடும்!
 
போன்சாய் மரங்களை வீட்டினுள் வளர்க்காதீர்கள். அது நீங்கள் இருக்கும் துறையில், வளர்ச்சிக்குத் தடைபோடும்.
 
வீட்டு தரையை வாரம் இரண்டு முறை, உப்புள்ள கடல் தண்ணீரால் துடைத்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகள் ஓடியே போகும்.
 
வாக்குவாதங்கள் வீட்டை ஆக்கிரமித்து இருக்கிறதா? அப்படியானால் நல்ல பாடல்களை, தினமும் நான்கு அல்லது ஐந்து முறை ஒலிக்க  விட்டால், வீட்டில் அமைதி நிலவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சில செய்யக் கூடாத ஆன்மிக செயல்கள்...!