Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெற்றிலையை வைத்து 12 ராசிகளுக்கும் பரிகாரங்கள் செய்வது எப்படி...?

வெற்றிலையை வைத்து 12 ராசிகளுக்கும் பரிகாரங்கள் செய்வது எப்படி...?
மேஷம்: வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட்டு சாப்பிட துன்பங்கள் அகலும். ரிஷபம்: வெற்றிலையில் மிளகு வைத்து  செவ்வாய்க்கிழமை ராகுவை வழிப்பட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.

மிதுனம்: வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.
 
கடகம்: வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷ்டம் விலகும். 
 
சிம்மம்: வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷ்டம் விலகும்.
 
கன்னி: வெற்றிலையில் மிளகு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.
 
துலாம்: வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.
 
விருச்சிகம்: வெற்றிலையில் பேரிச்சம்பழம் வைத்து செவ்வாய்க்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துயரம் தீரும்.
 
தனுசு: வெற்றிலையில் கற்கண்டு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.
 
மகரம்: வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.
 
கும்பம்: வெற்றிலையில் நெய் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.
 
மீனம்: வெற்றிலையில் சர்க்கரை வைத்து ஞாயிற்றுக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் நோய் தீரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமாவாசை நாட்களில் வீட்டு வாசலில் கோலம் போடுவது சரியா....?