Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனது நம் கட்டுப்பாட்டிற்குள் வைக்க தியான பயிற்சி அவசியமா...?

Advertiesment
மனது நம் கட்டுப்பாட்டிற்குள் வைக்க தியான பயிற்சி அவசியமா...?
நாம் தியானம் செய்ய ஒரு அறையை தேர்வு செய்து, அமர்ந்து கொண்டு, அந்த அறையில் நான்கு சதுரம் உள்ள தகர அல்லது கண்ணாடியால் ஆன கூண்டுக்குள் விளக்கு இருக்குமாறு வைக்க வேண்டும். அதன் மத்தியில் ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்து கொள்ளவேண்டும்.
அகல் விளக்கோ அல்லது காமாட்சி அம்மன் விளக்கோ வைத்து அதில், நல்லெண்ணெய் அல்லது தேங்காய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். பிறகு அந்த விளக்கின் முன்பு அமர்ந்து அதன் ஒளியை இடைவிடாமல் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
 
நம்மால் எவ்வளவு நேரம் தொடர்ந்து அந்த ஒளியை பார்க்க முடியுமோ அவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும். விளக்கில்  இருந்து வரும் ஒளியானது நமது கண்கள் வழியாக ஊடுருவி ஆன்மாவை தொடும். இதனால் நம்மையும் அறியாமல் ஒரு ஆனந்தம்,  பேராற்றல் வெளிப்படும். இது நம்முடைய மனது நம் கட்டுப்பாட்டிற்குள் எளிதில் வரும்.
 
இந்த வகையான் தியானத்தை செய்வதற்கு நேரம், காலம் பார்க்க தேவையில்லை. தொடர்ந்து ஐந்து நாட்கள் செய்தால் அதன் பிரகு இதில்  உள்ள மகிமையை உணரலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (04-01-2019)!