Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எந்த வகை சாபம் வம்சத்தை அழிக்கும் தெரியுமா...?

எந்த வகை சாபம் வம்சத்தை அழிக்கும் தெரியுமா...?
நமது வாழ்வில் இன்பம் துன்பம், பகல் இரவு இருப்பது போலதான் வரமும் சாபமும் உண்டு. வரங்கள் என்று பார்த்தால் நாம் மிகவும் சந்தோஷப்படுவோம், சாபம் என்று எடுத்துக்கொண்டால் நாம் மிகவும் வருத்தப்படுவோம். சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது. அவை என்ன, அந்த சாபத்தால் என்ன பிரச்சனைகள் வரும் என்பதை தெரிந்து கொள்ளுவோம்.
பெண் சாபம்: பெண்களை ஏமாற்றுவதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும் என்கிறார்கள்.
 
* பிரேத சாபம்: இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும்.  இதனால் ஆயுள் குறையும் என்கிறார்கள். 
 
* பிரம்ம சாபம்: நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் மறைப்பது இதனால் பிரம்ம சாபம் ஏற்படுகிறது. பிரம்ம சாபத்தால் படிப்பு இல்லாமல் போகும் என்கிறார்கள்.
 
* பூமி சாபம்: ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர்  பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.
 
* கங்கா சாபம்: பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும்.கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது என்பது உண்மை.
 
* விருட்ச சாபம்: பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த  இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும் எனவே  எச்சரிக்கை.
 
* தேவ சாபம்: தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.
 
* சர்ப்ப சாபம்: பாம்புகளை கொல்வதாலும், அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும். இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும் என்கிறார்கள்.
 
* பித்ரு சாபம்: முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்-தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும், அவர்களை ஒதுக்கி வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும்.
 
* கோ சாபம்: பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது, தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும். இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும்  இல்லாமல் போகும்.
 
* ரிஷி சாபம்: இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும். ரிஷி  சாபத்தால், வம்சம் அழியும்.
 
* குலதெய்வ சாபம்: இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது. குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும்  மகிழ்ச்சி ஏற்படாமல் போகும்.
 
* முனி சாபம்: எல்லை தெய்வங்கள் மற்றும் சின்ன சின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜைகளையும் மறப்பது  முனி சாபத்தை ஏற்படுத்தும். முனி சாபத்த செய்வினைக் கோளாறு ஏற்படும்.
 
* தேவ சாபம்: தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தாம் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (02-07-2019)!