Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தலை வைத்து தூங்குவதற்கு ஏற்ற திசை எது தெரியுமா?

தலை வைத்து தூங்குவதற்கு ஏற்ற திசை எது தெரியுமா?
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப்  படுத்தால் கண்வு, அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்க கூடாது.
வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும்போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப்படுவதுடன், இதயக்  கோளாறுகள், நரம்புத் தளர்ச்சி உண்டாலும்.
 
மல்லாந்து தூங்கக் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இஅடது பக்கமாக ஒருகளித்து படுத்து தூங்கவேண்டும்.  இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெலியே செல்வதால் நீண்ட ஆயுள் வலரும். மேலும்  இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச் செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீராண  பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.
 
வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் பொய் விஷமாக நேரிடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிரகப்பிரவேசம் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்...!