Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆறுமுக ருத்திராட்சம் அணிந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் !!

Rudraksha 1
, வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (17:22 IST)
6 முக ருத்ராட்சம் அணிந்து கொள்பவர்களுக்கு அவர்களின் உடல் மற்றும் மன நிலையில் நல்ல மாறுதல்கள் ஏற்பட்டு ஞாபக மறதி, மன நோய்கள் போன்றவை அனைத்தும் முழுமையாக குணமாகும்.


6 முறை ருத்ராட்சம் தொடர்ந்து அணிந்து வருபவர்களுக்கு எலும்புகளில் ஏற்படும் உறுதியின்மை நீங்கி, உடல் வலிமை மற்றும் ஆரோக்கியம் ஏற்படுகிறது.

6 முக ருத்ராட்சத்திற்கு இளமை தோற்றத்தை அதிகரிக்க செய்யும் தாந்திரீக சக்தி அதிகம் உள்ளது.

6 முக ருத்ராட்சம் பல மருத்துவ குணங்களை கொண்ட ஒரு வஸ்துவாக இருக்கிறது. இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறைகளால் பலருக்கும் மன அழுத்தங்கள் ஏற்பட்டு மன தளர்ச்சி, மன நிலை பாதிப்பு, ஞாபக மறதி போன்றவை ஏற்படுகிறன.

செல்வங்கள் பெருக உலகில் வாழ்வதற்கு அனைவரும் நியாயமான முறையில் பொருள் ஈட்டுவது அவசியம் ஆகும். சிவபெருமானின் அம்சம் கொண்டவை ருத்திராட்சங்கள் ஆகும்.

அதிலும் நேர்மறை சக்திகளை அதிகம் கொண்ட ஆறு முக ருத்திராட்சம் அணிந்து கொள்ளும் தொழில், வியாபாரங்கள் செய்யும் மனிதர்களின் செல்வ நிலை உயர தொடங்கும். அசையும் மற்றும் அசையா சொத்துகளின் எண்ணிக்கை பெருகி கொண்டே செல்லும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகாலட்சுமியை நம் வீட்டிலேயே நிரந்தரமாக அமர வைத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும்...?