Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வசந்த பஞ்சமி நாளில் விரதம் இருந்து வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் !!

வசந்த பஞ்சமி நாளில் விரதம் இருந்து வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் !!
, சனி, 5 பிப்ரவரி 2022 (10:53 IST)
சுக்ல பஞ்சமி என்று சொல்லப்படும் வசந்த பஞ்சமி நாளில், விரதம் இருந்து அம்பாளைத் தொழுது பிரார்த்தித்தால், வாழ்வில் வசந்தம் நிச்சயம். இந்த நாளில், காலையில் விரதம் மேற்கொள்வது நல்ல பலன்களை பெற்று தரும்.


வீட்டில் விளக்கேற்றி அபிராமி அந்தாதி பாராயணம் செய்யலாம். ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். இவை வாழ்வில் பல உன்னதங்களைப் பெற்றுத் தரும்.

சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம், கேசரி முதலான நைவேத்தியங்களைப் படைத்து தேவியை உபாஸிக்கலாம். அதேபோல், அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று அம்பாளை வணங்கி வழிபடலாம்.

செவ்வரளி மாலை சார்த்துங்கள். செந்நிற மலர்கள் சூட்டுங்கள். நெய் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். எலுமிச்சை மாலை சார்த்தி வழிபடுவது இன்னும் வளமும் பலமும் சேர்க்கும். முடிந்தால், அன்றைய நாளில், அம்பாளை வழிபட்டு, இயலாதோருக்கு தயிர்சாதம் வழங்குங்கள். அதில் குளிர்ந்து போய், நம் வாழ்வில் வசந்ததத்தைத் தந்தருள்வாள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீராத வியாதிகளை குணமாக்கும் மரகத லிங்கத்தை வழிபாடு !!