Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆடி செவ்வாய்க்கிழமை விரதங்களும் சிறப்புக்களும் !!

ஆடி செவ்வாய்க்கிழமை விரதங்களும்  சிறப்புக்களும் !!
ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையில், மறக்காமல் அம்மனை கண்ணார தரிசித்து மனதார வேண்டி கொள்ளுங்கள்.

ராகு கால வேளையில், அம்மனை தரிசித்து செவ்வரளி மாலை சாற்றுங்கள். மேலும், துர்க்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி, வழிபடுங்கள்.
 
ஆடி கடைசி செவ்வாய்க்கிழமையில், அம்மனை தரிசனம் செய்வதால் தடைபட்ட மங்கள காரியங்கள் அனைத்தும் இனிதே நடைபெறும்.
 
பெண்கள் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கூடும் என்று நம்புகின்றனர். 
 
செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கள கௌரி விரதம் கடைபிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.
 
ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அன்னதானம் செய்தால், பிற நாட்களில் செய்வதைவிட அதிக பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 
 
ஜாதகத்தில் செவ்வாய் தோஷமும், அங்காரக தோஷமும், செவ்வாய் நீச்சமடைந்தவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும்.
 
பத்ரகாளி ராகுவாக அவதாரம் செய்தாள் என்பர். செவ்வாய் தோஷத்தாலும், நாகதோஷத்தாலும் திருமணம் தடைபட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் ராகுகாலப் பூஜைகளில் பங்கு பெறுவது நல்லது.
 
ஆடி செவ்வாய்க்கிழமைகளில் மட்டுமின்றி பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு விரதம் கடைபிடிப்பதும் நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 முக ருத்ராட்சம் அணிந்து கொள்வதால் இத்தனை நன்மைகளா...!!