Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவேகானந்தரின் ஆன்மிக துளிகளில் சில...!

Webdunia
பலவீனத்திற்கான பரிகாரம், அந்த பலவீனத்திற்கான காரணத்தை சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். உலகம் வேண்டுவது ஒழுக்கமே.  கொழுந்து விட்டெரியும் அன்பும், தன்னலமில்லாத பண்பும் யாரிடம் இருக்கிறதோ அவரை இம்மண்ணுலகமே வேண்டி நிற்கிறது.
எழுந்து நில்லுங்கள். தைரியமாயிருங்கள். பலமுடையவராகுங்கள். உங்கள் மீதே முழுப்பொறுப்புகளையும் சுமந்து கொண்டு வாழப்பழகுங்கள்.
 
சிரத்தை தான் நமக்குத் தேவை. மனிதனுக்கு மனிதன் வேறுபடுவதற்குக் காரணமே இந்த சிரத்தை தான். சிரத்தை உடையவன் வெற்றி பெறுகிறான். சிரத்தை இல்லாதவன் தாழ்ந்தவனாகிறான்.
 
ஒரு குறிக்கோளை எடுத்துக் கொள்ளுங்கள். அதையே கனவு காணுங்கள். அதன் நோக்கியே வாழ்க்கை நடத்துங்கள். அந்த கருத்தை உயிர்மூச்சாகக் கொண்டு  செயல்படுங்கள். வெற்றி பெறுவீர்கள்.
வீர இளைஞர்களே! முன்னேறிச் செல்லுங்கள். கட்டுண்டு கிடக்கச் செய்யும் தடைகளை வெட்டி வீழ்த்தவும், எளியவர்களின் துயரச்சுமையை குறைக்கவும்,  இருண்ட உள்ளங்களில் ஒளியேற்றவும் முன்னேறிச் செல்லுங்கள்.
 
நம்புங்கள். இறைவனின் கட்டளை வந்துவிட்டது. பாமரமக்களும், எளியவர்களும் நலம் பெற வேண்டும் உழைத்திடுங்கள். இறைவனின் கையில் நீங்கள் ஒருகருவி என்ற உணர்வுடன் பிறருக்கு சேவை செய்யுங்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருட பஞ்சமி: அண்ணன்கள் நலத்திற்காக தங்கைகள் இருக்கும் விரதம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும்! இன்றைய ராசி பலன்கள் (28.07.2025)!

நாளை மறுநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. நிறைபுத்தரிசி பூஜை தேதியும் அறிவிப்பு..!

இந்த ராசிக்காரர்களுக்கு கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும்! இன்றைய ராசி பலன்கள் (27.07.2025)!

கடவுளுக்காக தினசரி ஒரே ஒரு நிமிடம் ஒதுக்குங்கள்.. குழந்தைகளுக்கு பூஜையை கற்று கொடுங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments