திருமணம் செய்யாமல் வாழ்ந்தவர்கள் வழக்கு தொடர உரிமையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (16:58 IST)
திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதர் என்ற முறையில் வாழும் தம்பதிகள் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கோவையைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவர் ஜோசப் என்பவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்ததாகவும் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து வாழ்வதை அடுத்து தனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதர் முறையில் வாழும் தம்பதிகள் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர அனுமதி இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்
 
அதுமட்டுமின்றி கலைச்செல்வி கொடுக்கல் வாங்கல் தகராறில் முன்விரோதம் காரணமாகவே இந்த வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

82 லட்சம் மதிப்பீட்டில் திறக்கப்பட்ட பூங்காவில் முறைகேடு.. கோவையில் அதிர்ச்சி

இனிமே விஜயை நம்பி யூஸ் இல்ல!.. வேறு கட்சிக்கு தாவிய தாடி பாலாஜி...

விஜய்கிட்ட கேள்வி கேளுங்க!... அப்ப புரியும்!.. போட்டு தாக்கிய உதயநிதி...

'இளம் பெரியார்' என்று அழைப்பது அந்த பெரியவருக்கே செய்யும் அவமானம்.. உதயநிதி குறித்து ஆதவ் அர்ஜூனா

பில் இவ்வளவா? சென்னை உணவகத்தில் சாப்பிட்ட நியூசிலாந்து சிறுவனின் ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments