Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முன்னும் பின்னும் போட்டி போடும் ராயபுரம், கோடம்பாக்கம்: கொரோனா கொடூரம்!

முன்னும் பின்னும் போட்டி போடும் ராயபுரம், கோடம்பாக்கம்: கொரோனா கொடூரம்!
, வியாழன், 21 மே 2020 (10:52 IST)
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல். 
 
 
தமிழகத்தில் நேற்று 743 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது.  
 
கொரோனாவால் பாதிப்பு அடைந்த 743 பேர்களில் சென்னையில் மட்டும் 557 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,228 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் பொருத்த வரை ராயபுரத்தில் அதிகபட்சமாக 1,538 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,192, திரு.வி.க. நகரில் 976, தண்டையார்பேட்டையில் 773, அண்ணா நகரில் 662 ஆக கோரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு! எங்கெங்கு தெரியுமா?