Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 வயதிலேயே திருமணம்… மனைவியின் கோரிக்கையால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!

Webdunia
சனி, 26 டிசம்பர் 2020 (11:27 IST)
தென்காசியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனிக்குடித்தனம் போகவேண்டும் என்ற மனைவியின் கோரிக்கையால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் பாப்பான்குளம் அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த ராஜ்குமார். 20 வயதே ஆகும் இவர் சில மாதங்களுக்கு முன்னர் 18 வயதான ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். புதுமனத் தம்பதிகள் இருவீட்டாரோடும் சேர்ந்து ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். ஆனால் மனைவியோ தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று நச்சரித்துக் கொண்டே இருந்துள்ளாராம்.

ஆனால் இந்த கோரிக்கைக்குக் குடும்பத்தினர் ஒத்துக் கொள்ளவில்லையாம். இதனால் இரு பக்கமும் இருந்த நச்சரிப்பால் ராஜ்குமார் மன உளைச்சலுக்கு ஆளாகியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறிய ராஜ்குமார் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் சந்தேகம் அடைந்து தேட ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து அவரது ஊருக்கு அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் கோவில் பின்புறம் ஆணின் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்த போது அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது தெரிந்துள்ளது. இது சம்மந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments