Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மைனர் பெண்ணைக் கடத்திச் சென்ற இளைஞர் – மூன்று நாட்கள் கழித்து பிடித்த போலிஸ்!

மைனர் பெண்ணைக் கடத்திச் சென்ற இளைஞர் – மூன்று நாட்கள் கழித்து பிடித்த போலிஸ்!
, புதன், 26 ஆகஸ்ட் 2020 (08:08 IST)
சென்னையில் துணிக்கடையில் வேலை செய்து வந்த பெண்ணை இளைஞர் ஒருவர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்காததால் அங்குள்ள துணிக்கடை ஒன்றில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது மற்றொரு துணிக்கடையில் பணியாற்றி வந்த யுவ்ராஜ் என்ற இளைஞர் அந்த பெண்ணை பாலோ செய்துவந்ததாக சொல்லப்படுகிறது. சிறுமியிடமும் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு முதலில் மறுத்த சிறுமி, பின்னர் அவர் திருமணம் செய்துகொள்வதாக சொன்னதும் அதற்கு ஒத்துக்கொண்டதாக தெரிகிறது.

இதையடுத்து கடந்த 19ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து சிறுமியை காணவில்லை என பெற்றோர் போலிஸில் புகார் கொடுக்க, மூன்று நாட்கள் விசாரணைக்குப் பிறகு கொருக்குப்பேட்டை ராஜீவ் காந்தி நகரில் இளைஞர் யுவராஜ் உடன் சிறுமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமியைக் காப்பாற்றிய போலீஸார், அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களின் நிலை என்ன? நீதிமன்றத்தில் அரசு பதில்!